டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல மலையாள சின்னத்திரை சீரியல் இயக்குனர் உன்னி கிருஷ்ணன் மீது அவரது தொடரில் நடித்து வரும் நிஷா சாரங் பாலியல் புகார் கூறினார். இதைத் தொடர்ந்து கேரள மகளிர் ஆணையம் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் உன்னிகிருஷ்ணன் மீது மற்றொரு நடிகையும் புகார் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் குணசித்ர வேடங்களில் நடிதது வருகிறவர் ரச்சனா. அவர் கூறியிருப்பதாவது:
நான் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு உன்னி கிருஷ்ணன் இயக்கிய தொடரில் நடித்தேன். அவர் என்னை தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். நான் மறுத்ததால் அவர் என்னை துன்புறுத்தினார். அவமானப்படுத்தினார், தகாத வார்த்தைகளால் பேசினார். அவர் மிகவும் திமிர்பிடித்தவர். சீரியலில் நடிக்கும் பெண்களை அடிமையாக நினைக்கிறவர். சினிமா வாய்ப்பு கிடைத்ததும் சீரியில் இருந்து விலகிக் கொண்டேன். நான் சினிமா நடிகை ஆனதுகூட அவருக்கு பிடிக்கவில்லை, சினிமா வாய்ப்பு கிடைத்த மறுநாளே என்னை சீரியலில் இருந்து விலக்கி விட்டார்.
இப்போது அவர் நிஷாவுக்கும் தொல்லை கொடுத்திருப்பதை கேள்விப்பட்டு மிகவும் வருத்தப்பட்டேன். அவருக்கு நான் ஆறுதல் கூறினேன். நிஷாவுக்கு நீதி கிடைக்க அவருக்கு துணையாக இருப்பேன். மலையாள திரையுலகமும் அவருக்கு துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு ரச்சனா கூறியுள்ளார்.