பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். 120 கோடி ரூபாய் செலவில் தயாராகும் இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். வில்லனின் நண்பனாக கலையரசன் நடிக்கிறார். இப்போது ரஜினியின் நண்பனாக மலையாள நடிகர் பஹத் பாசில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு வந்திருக்கிறார் ரஜினி. அடுத்த கட்ட படப்பிடிப்புகள் வருகிற 20ந் தேதி முதல் நடக்கிறது. என்றாலும் படக்குழுவினர் அங்கேயே தங்கி உள்ளனர். ரஜினி 19ந் தேதி டார்ஜிலிங் கிளம்பி போகிறார். இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் ரஜினியுடன் பஹத் பாசிலும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. படத்தில் பகத் பாசில் நடிப்பது பற்றி இன்னும் சில தினங்களில் முறையான அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது. பஹத் பாசில், சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.