‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா |
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் வெளியான பிறகுதான் அந்த படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிரான வசனங்கள் இருப்பதாக சொல்லி படத்திற்கு இலவச விளம்பரம் கொடுத்தார்கள். ஆனால் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படத்திற்கு பர்ஸ்ட் லுக்கிலேயே புகையால் புகைச்சல் உருவாகி உள்ளது.
தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வரயிருப்பதால் சர்ச்சைகளை கண்டுகொள்ளாமல் படப்பிடிப்பில் விஜய்யும், முருகதாசும் மும்முரமாக இருக்கிறார்கள். தற்போது சென்னை ஈசிஆர் சாலையில் சர்கார் படப்பிடிப்பு துரிதமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கும் வரலட்சுமி, விஜய் காதில் கடுக்கன் அணிந்தபடி ஒரு குடையை பிடித்து நிற்கும் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதோடு, இது அனுமதியுடன் எடுக்கப்பட்ட போட்டோதான் என்றும் கூறியுள்ளார்.