டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் திரைப்படத்தில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் டாக்டர் சீனிவாசன். தனக்கு தானே பவர்ஸ்டார் என்று பட்டம் வைத்து கொண்டவர். இவர் மீது பல பண மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அடிக்கடி ஜெயிலுக்கும் சென்று வருவார். இந்த நிலையில் அவர் மீது புதிய மோசடி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கார் டிரைவர் தயாநிதி. இவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்துள்ளது. இதற்காக அவர், சீனிவாசனை அணுகி உள்ளார். அப்போது அவரிடம் "சினிமா ரொம்ப கஷ்டம் நான் உனக்கு எனக்கு தெரிந்த பைனான்சியரிடம் குறைந்த வட்டிக்கு 30 லட்சம் கடன் வாங்கித் தருகிறேன். அதை வைத்து வேறு தொழில் செய்" என்று கூறியிருக்கிறார். அதன்படி 30 லட்சம் கடனுக்கு தயாநிதியிடம் 4லட்சத்து 16 ஆயிரம் கமிஷன் வாங்கி உள்ளார்.
ஆனால் கடன் பெற்றுத்தராமல் ஏமாற்றி உள்ளார். இது தொடர்பாக தயாநிதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி அவர் மீது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.