அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ராஜமௌலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் வெளிவந்த 'நான் ஈ' படம் அதிசயத்தக்க வெற்றியைப் பெற்றது. 'ஈ'யை வைத்தெல்லாம் ஒரு படமா என வியக்க வைக்கும் அளவிற்கு அந்தப் படம் இரு மொழிகளிலும் மகத்தான வசூலையும் கொடுத்தது.
அந்தப் படத்தில் வில்லனாக நடித்த கன்னட நடிகர் கிச்சா சுதீப் தமிழிலும் பிரபலமானார். அதன் பின் விஜய் நடித்த 'புலி' படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படத்திற்குப் பின் 'முடிஞ்சா இவனப் புடி' படத்தில் நாயகனாகவும் நடித்தார். ஆனால், இரண்டு படங்களும் தமிழில் தோல்வியடைந்ததால் அவர் மீண்டும் தமிழ்ப் பக்கம் வரவில்லை.
தற்போது கன்னடத்தில் 'தி வில்லன், அம்பி நிங் வயசயதோ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சிரஞ்சீவியுடன் 'சைரா நரசிம்ம ரெட்டி' தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் தற்போது கலந்து கொண்டு நடித்து வரும் சுதீப் அந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
“சினிமா சரியான இடைவெளியில் எனக்கு ஆச்சரியத்தை அளித்து வருகிறது. இது மற்றுமொன்று... சுரேந்திர ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி உடன் 'சைரா' படத்தில் இணைந்து நடித்து வருகிறேன். என்னுடைய முதல் சரித்திரப் படமும் கூட. உற்சாகம்... ஆமாம்... கவலை... ஆமாம்,” எனக் கூறியுள்ளார்.
'சைரா' படம்தான் முதல் சரித்திரப் படம் என்று சொல்லியிருக்கிறார். அப்போது தமிழில் விஜய்யுடன் அவர் நடித்து வெளிவந்த 'புலி' படம், பாகுபலி படம் போன்றவைகள் சரித்திரப் படம் இல்லையா...?.