'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை பார்வதியை பொறுத்தவரை தன் மனதில் பட்ட கருத்துக்களை அது சரியா தவறா என கூட பார்க்காமல் பளிச்சென பேசி விடுவார். இதனாலேயே சர்ச்சை நடிகைகள் பட்டியலில் நடிகை ரீமா கல்லிங்கலுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.
மலையாள நடிகர் சங்க தேர்தல் நடந்தபோது, முக்கிய பொறுப்புக்கு தான் போட்டியிட விரும்பியதாகவும் ஆனால் ஒரு சிலரால் தான் தடுக்கப்பட்டதாகவும் அவ்வப்போது சில பேட்டிகளில் கூறி வந்தார் பார்வதி.
நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த மோகன்லாலிடம் பார்வதி கூறியது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மோகன்லால், பார்வதியை போட்டியிட வேண்டாம் என யார் தடுத்தது..? நான் இதை நம்பவில்லை.. அது உண்மையாக இருந்தால், சமீபத்தில் கூடிய பொதுக்குழுவில் கலந்துகொண்டு, தன்னை யார் தடுத்தார்கள் என்பதை அவர் தைரியமாக கூறியிருக்கலாமே..? எங்களில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து விலகி இருப்போமே.. இப்போதும் கூட பார்வதி விரும்பினால் அவருக்கு பொறுப்புகள் தர தயாராக இருக்கிறோம்" என சற்று காட்டமாக கூறியுள்ளார் மோகன்லால்.