கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
நடிகை பார்வதியை பொறுத்தவரை தன் மனதில் பட்ட கருத்துக்களை அது சரியா தவறா என கூட பார்க்காமல் பளிச்சென பேசி விடுவார். இதனாலேயே சர்ச்சை நடிகைகள் பட்டியலில் நடிகை ரீமா கல்லிங்கலுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.
மலையாள நடிகர் சங்க தேர்தல் நடந்தபோது, முக்கிய பொறுப்புக்கு தான் போட்டியிட விரும்பியதாகவும் ஆனால் ஒரு சிலரால் தான் தடுக்கப்பட்டதாகவும் அவ்வப்போது சில பேட்டிகளில் கூறி வந்தார் பார்வதி.
நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த மோகன்லாலிடம் பார்வதி கூறியது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மோகன்லால், பார்வதியை போட்டியிட வேண்டாம் என யார் தடுத்தது..? நான் இதை நம்பவில்லை.. அது உண்மையாக இருந்தால், சமீபத்தில் கூடிய பொதுக்குழுவில் கலந்துகொண்டு, தன்னை யார் தடுத்தார்கள் என்பதை அவர் தைரியமாக கூறியிருக்கலாமே..? எங்களில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து விலகி இருப்போமே.. இப்போதும் கூட பார்வதி விரும்பினால் அவருக்கு பொறுப்புகள் தர தயாராக இருக்கிறோம்" என சற்று காட்டமாக கூறியுள்ளார் மோகன்லால்.