தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் சர்கார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கு கடந்த ஜூன் 21-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் ஒரு போஸ்டரில் விஜய் புகைப்பிடித்த காட்சிகளும் இடம் பெற்று இருந்தன. புகைப்பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என விஜய் கூறிவிட்டு, இப்போது அதை மீறிவிட்டார் என அவர் மீது கண்டன குரல்களும் எழுந்தன.
சில தினங்களுக்கு முன்னர் பொது சுகாதாரதுறை, உடனடியாக அந்த போஸ்டரை நீக்க வேண்டும் எச்சரித்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட போஸ்டரை படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் டுவிட்டரில் நீக்கியது. இருந்தாலும் ஏற்கனவே வெளியான புகைப்பட ஸ்டில்களை விஜய் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை எதிர்த்து சென்னையை சேர்ந்த வக்கில் ஒருவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், சர்கார் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சியை ஊக்கப்படுத்தும் வகையில் விளம்பரப்படுத்தியதற்கு விஜய், முருகதாஸ், தயாரிப்பாளர் ஆகியோர் தலா ரூ.10 கோடியை அடையாறு புற்று நோய் மருத்துவ மையத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என தமது மனுவில் கூறியிருந்தார்.