தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் ரிலீஸ் ஆன கொலவெறி பாடல் புகழ் 3 படம் ஹிட் ஆனதா, ப்ளாப் ஆனதா என்ற கேள்விக்கு நடிகர் தனுஷ் பதில் அளிக்க மறுத்து விட்டார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், 3 படம் ஹிட்டானதா? இல்லையா? என்று எனக்கு தெரியாது. எனவே அதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை, என்று கூறியிருக்கிறார். மேலும் இப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு போதுமான பணம் கிடைத்துள்ளது என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும், என்றும் தனுஷ் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், கொலவெறி பாடல் இந்த அளவுக்கு பிரபலமாகி எனக்கு பெரிய அந்தஸ்தை பெற்றுத் தரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த பாடல் ஹிட் மூலம் முடியாதது எதுவுமில்லை. எல்லாமே முடியக்கூடியது என்று கற்றுக் கொண்டேன். நடனம் ஆடவும், பாடவும் எனக்கு பிடிக்கிறது. கொலை வெறி பாட்டில் ஆங்கில வார்த்தைகள் கலந்ததற்காக விமர்சனங்கள் கிளம்பின. நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் எனது உலகத்தில் நான்தான் ராஜாவாக இருந்தேன். நடிகரானதும் எனக்கு ஆங்கிலம் தெரியாததால் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளானேன். என்னுடன் நடித்த நடிகர் - நடிகைகள் எல்லோரும் வேறு மாநிலங்களில் இருந்து வந்தனர். அவர்களிடம் அவரவர் மொழியில் என்னால் பேச முடியவில்லை. நட்சத்திர ஓட்டல்களில் கூட ஆர்டர் செய்ய முடியாமல் சிரமப்பட்டேன். ஆங்கில அறிவு இன்மையால் எனது நம்பிக்கை முழுமையாக சிதைந்து போனது. எனது உணர்வுகள் நிறைய பேரிடம் இருப்பதை தெரிந்து கொண்டேன். அதை கொலைவெறி பாட்டில் பிரதிபலித்தேன். அப்பாடல் விமர்சிக்கப்பட்டது, என்று கூறியுள்ளார்.