ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மலையாள திரையுலகத்தை விட்டு ஒதுங்கி இருந்த துல்கர் சல்மான் தற்போது மீண்டும் தன் சொந்த ஊருக்கு திரும்பி படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் தற்போது அவர் நடிக்கும் புதிய படத்திற்கு ஒரு யமண்டன் பிரணயகதா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தை நௌபல் என்கிற புது இயக்குனர் இயக்குகிறார் இவர் ஏற்கனவே நிறைய டிவி நிகழ்ச்சிகளை இயக்கிய அனுபவம் உள்ளவர்.
இந்த படத்தில் துல்கர் ஹீரோவாக இருந்தாலும் இந்த படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்க வைத்திருப்பது இந்த படத்தின் கதாசிரியர்களான பிபின் ஜார்ஜ் மற்றும் விஷ்ணு உன்னிகிருஷ்ணன் ஆகிய இருவரும் தான். ஏற்கனவே அமர் அக்பர் அந்தோணி மற்றும் கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு கதை எழுதிய இந்த இரட்டையர் கூட்டணி இந்த படத்தின் மூலமாக மூன்றாவது முறையாக அமைந்துள்ளது.
இந்த படத்தில் நகைச்சுவையில் துல்கரின் இன்னொரு முகத்தை பார்க்கலாம் என்கிறார்கள் இந்த கதாசிரியர்கள் போதாதற்கு கதாசிரியர்களில் ஒருவரான விஷ்ணு உன்னிகிருஷ்ணனும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறாராம்.