'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
குலேபகாவலி, மெர்குரி, யங் மங் சங் ஆகிய படங்களுக்குப்பிறகு ஏ.சி.முகில் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார் பிரபுதேவா. இந்த படத்தில் அவர் முதன்முறையாக போலீசாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.
ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தில் பிரபு தேவாவுடன் மோதும் வில்லனாக தெலுங்கு நடிகர் பிரபாகர் நடிக்கிறார். இவர் ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் காளகேயா மொழியில் பேசும் வேற்று நாட்டு அரசனாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது வேடம் கொடூரமாக சித்தரிக்கப்பட்டிருந்தது.
அந்த பிரபாகர் தான் ஏ.சி.முகில் இயக்கும் படத்தில் பிரபுதேவாவுடன் மோதுகிறார். இந்த படத்தில் மொத்தம் 6 சண்டை காட்சிகள் உள்ளதாம்.