பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாணா காத்தாடியில் அறிமுகமான சமந்தா, இப்போதுவரை தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவரது திருமணத்திற்கு பிறகு வெளியான ரங்கஸ்தலம், மகாநதி, இரும்புத்திரை ஆகிய படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அடுத்தபடியாக சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் என சில படங்கள் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. தற்போது யுடர்ன் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை அடுத்து சமந்தா நடிப்புக்கு முழுக்கு போடப்போவதாக கடந்த சில தினங்களாகவே டோலிவுட்டில் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த செய்தியை சமந்தா தரப்பு தற்போது மறுத்துள்ளது.
சமந்தா தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கவே ஆசைப்படுகிறார். யுடர்ன் ரீமேக் படத்தை முடித்ததும் நாகசைதன்யாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை நின்னுகோரி படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார். அதன்பிறகு இரண்டு மெகா படங்களில் நடிப்பது குறித்து சமந்தா பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.