ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை ஜெயசித்ரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : சென்னை ரங்கராஜபுரத்தில் எனக்கு 750 சதுர அடியில் சொந்த வீடு இருக்கிறது. இதில் கார் புரோக்கர் இளமுருகனும், அவரது மனைவி மீனாவும் வாடகைக்கு குடியிருந்தார்கள்.
12 வருடங்களாக குடியிருந்த அவர்கள் வாடகை தராமல் ஏமாற்றினார்கள். 7 லட்சம் வாடகை பாக்கி இருந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட தொகை பெற்றேன். அதன் பிறகும் வாடகை தரவில்லை. பேங் மூலம் கொடுத்ததாக கோர்ட்டில் பொய் சொன்னார்கள்.
கோர்ட் உத்தரவுப்படி வருகிற 20-ம் தேதிக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும். காலி செய்யாவிட்டால் போலீஸ் உதவியுடன் பூட்டை உடைத்து காலி செய்ய வேண்டியது இருக்கும். ஆனால் இளம்முருகன் என்மீது தேவையற்ற குற்சாட்டுகளை கூறி என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தார்.
இந்த நிலையில் அவர் பைனான்சியர் அசோக் லேதா, நடிகர் விக்னேஷ் ஆகியோரிடம் பணம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வீட்டை சுற்றி அவர் சூன்யம் வைத்துள்ளார். கடவுளும், நீதிமன்றமும் எனக்கு நீதி வழங்குவார்கள் என்று நம்புகிறேன். என்றார் ஜெயசித்ரா.