இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கொலவெறி, கொலவெறி... என்று ஒரு பாட்டை வைத்து 3 படம் ஆஹா, ஓஹோ என இருக்கும் என்று நம்பி மிகுந்த காசு கொடுத்து படத்தை வாங்கிய தயாரிப்பாளர்கள், இப்போது ஏன்டா 3 படத்தை வாங்கினோம் என்று புலம்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆந்திராவில் இப்படத்தை வாங்கிய தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான நட்டி குமாருக்கு பெருத்த நஷ்டமாம். பார்ப்பவர்கள் எல்லாரிடமும் கண்ணீர் விடாத குறையாக புலம்பி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ஆந்திராவில் தனுஷ் நடித்த படம் அதிகபட்சமாக ரூ.10 லட்சத்திற்குதான் விலை போய் இருக்கிறது. இருந்தும் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை நம்பி ரூ.4.30 கோடிக்கு 3 படத்தை வாங்கினேன். பலரும் இவ்வளவு பணம் போட்டு ஏன் இந்த படத்தை வாங்குகிறாய் என்று கேட்டனர். இருந்தும் ரஜினி குடும்பத்தார் மீது இருந்த நம்பிக்கையில் 3-ஐ வாங்கினேன். மேலும் கடந்த ஏப்ரல் 1ம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் 3 படத்தின் புரோமஷனல் மற்றும் சிறப்பு காட்சிக்கு வருவதாக கூறினர். ஆனால் வரவில்லை. இருவரும் என்னை ஏமாற்றிவிட்டனர். படமும் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக போகவில்லை. இதனால் எனக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முன்பு, ரஜினி தன்னுடைய பாபா படத்திற்கு நஷ்ட ஈடு வழங்கியது போல, 3 படத்திற்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.