தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் நடிகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும் உதயநிதி ஸ்டாலின் அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்க ஆரம்பித்து இருக்கிறார். தயாரிப்பாளராக இருந்து நடிகர் அவதாரம் எடுத்திருக்கும் உதயநிதி நடித்த முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் ஏப்ரம் 13-ம் முதல் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இந்நிலையில் உதயநிதி, தற்போது புதிய படத்தில் நடிப்பதற்காக கதை கேட்கும் பணியில் இறங்கியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், தொடர்ந்து நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். தொடர்ந்து 2 அல்லது 3 நகைச்சுவைப் படங்களில் நடித்துவிட்டு பிறகு வேறு அம்சங்கள் கொண்ட படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளேன். சந்தானத்திற்கும், ஹன்சிகா மோத்வானிக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். படப்படிப்பின் போது எனக்கு நிறைய ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். எனக்கு காமிரா முன்பு நிற்பதும், வசனம் பேசுவதும் மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், படக்குழுவினர்தான் எனக்கு பெரிதும் உதவினார்கள், என்று கூறியுள்ளார்.