தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை பலப்படுத்த நிர்வாகிகளை நியமனம் செய்ய போவதாக செய்தி வெளியிட்டிருந்தோம். அது தற்போது உண்மையாகி உள்ளது. தனுஷ், தனது மன்றத்திற்கு தலைவர், செயலாளரை நியமித்துள்ளார்.
இதுதொடர்பாக தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : "என் அன்பிற்குரிய ரசிகர் நற்பணிமன்ற தம்பிகளுக்கு வணக்கம். உங்களின் அன்பாலும், கடின உழைப்பினாலும் நமது நற்பணிமன்றம் சிறந்த கட்டுகோப்புடன் விளங்கி வருகிறது.
நமது மன்றத்தின் நலன் கருதி நீண்ட ஆலோசனைக்கு பிறகு, நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவராக சுப்ரமணியம் சிவாவையும், செயலாளராக ராஜாவையும் நியமிக்கிறேன். இவர்களுக்கு எப்போதும் போல் உங்களின் முழு ஒத்துழைப்பை தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்".
இவ்வாறு தனுஷ் கூறியுள்ளார்.
தலைவர் சுப்ரமணியம் சிவா வேறு யாருமல்ல, தனுஷின் திருடா திருடி, சீடன் மற்றும் அமீரின் யோகி படங்களை இயக்கியவர்.