பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
எந்த வேடத்திலும் என்னால் சாதிக்க முடியும், என்று நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார் நடிகை தன்ஷிகா. பேராண்மை படத்தில் வீரமான பெண்ணாக நடித்த தன்ஷிகா, அரவான் படத்தில் கிராமத்து பெண்ணாக கலக்கியிருந்தார். அரவான் படத்தில் அம்மணியின் நடிப்பு ரொம்பவே பேசப்படுகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் அவர், தன்னால் எந்த மாதிரியான கேரக்டரிலும், துணிச்சலுடன் நடிக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.
தன்ஷிகா அளித்துள்ள பேட்டியில், எனக்கு தமிழ் தெரியும் என்பதால் தான் பேராண்மை படத்தில் ஜனநாதன் சார் வாய்ப்பு தந்தார். இந்த படத்தில் என் கேரக்டரையும், நடிப்பையும் பார்த்து தான் வசந்தபாலன் சார் அரவான் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். என்னால் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளேன். மற்ற நடிகைகள் மாதிரி கவர்ச்சியாகவும் என்னால் நடிக்க முடியும். மாஞ்சா வேலு படத்தில் அப்படித்தான் நடித்திருக்கிறேன்.
அரவான் படத்திற்காக நிறைய ஹோம்-ஒர்க் செய்தேன். சென்னையில் வளர்ந்ததால் கிராமத்து பெண் பாடிலேங்கு வேஜ் கொண்டு வர நிறைய சிரமப்பட்டேன். அதோடு, மதுரை பாசையேயும் சரியாக வராமல் கஷ்டப்பட்டடேன். என்றாலும் டப்பிங் வரும் போது சரி செய்து விட்டேன். போட்டின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். நடிச்ச மூணு படங்களிலேயே வெரைட்டியான ரோல் பண்ற நடிகைன்னு பெயர் கிடைச்சிருக்கு. பேராண்மையில் தைரியமான பொண்ணு. மாஞ்சாவேலுவில் ரொமான்ஸ். அரவானில் கிராமத்துப் பெண். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. அதனால் எந்த வேடத்திலும் என்னால் சாதிக்க முடியும், என்று கூறியிருக்கிறார்.