பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தமிழ் சினிமாவில் 70களின் இறுதியில் வில்லன் நடிகராக நடித்தவர் ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பர் மோகன்பாபு. பின்னர் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்து பல படங்களில் நடித்தார்.
சமீபத்தில் 'மகாநதி' படத்தில் எஸ்.வி.ரங்காராவ் கதாபாத்திரத்தில நடித்திருந்தார். அவருடைய இரு மகன்கள் விஷ்ணு, மனோஜ் இருவரும் தெலுங்கு சினிமாவில் நடிகர்களாக இருக்கிறார்கள். அவருடைய மகள் லட்சுமி மஞ்சுவும் நடிகையாக இருக்கிறார். தமிழில் மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் நடித்தவர் லட்சுமி மஞ்சு. ஆனால், அந்தப் படத்தில் லட்சுமி நடித்த பல காட்சிகளைத் தூக்கிவிட்டார் மணிரத்னம்.
ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் ஜோதிகா நடிக்கும் 'காற்றின் மொழி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள லட்சுமி, ஜோதிகாவின் நடிப்பைப் பாராட்டித் தள்ளியுள்ளார்.
“ஜோதிகாவுடன் பணியாற்றி வருகிறேன்... வாவ்... என்ன ஒரு திறமைசாலி. ஏற்கெனவே அவருடைய தீவிர ரசிகை, தற்போது இன்னும் அதிகமாக. அவருடைய கண்கள் அதிகம் பேசுகின்றன, காமிரா அவரை அதிகம் நேசிக்கிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு மற்றும் பலர் நடிக்கும் 'காற்றின் மொழி' படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்து வருகிறது.