ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமா காமெடி நடிகர்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. டபுள் மீனிங் வசனங்கள், வித்தியாசமான குரல் எழுப்பி வசனம் பேசுவது என கடைசி வரை மற்றவர்களிடமிருந்து தனித்து தெரிந்தார். 1965ம் ஆண்டு வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமான மூர்த்தி அன்று முதல் வெண்ணிற ஆடை மூர்த்தி என்றே அழைக்கப்பட்டார்.
முள்ளும் மலரும், அழியாத கோலங்கள் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும் நடித்தார். 50 ஆண்டுக்கும் மேலான திரைப் பயணத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் நடித்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக முதுமை காரணமாக சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். வெண்ணிற ஆடை மூர்த்தி நடிகை மணிமாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது 80வது பிறந்த நாளை மனைவி மணிமாலாவுடன் எளிமையாக கொண்டாடினார் வெண்ணிற ஆடை மூர்த்தி. நடிகை சச்சு உள்ளிட்ட ஒரு சில திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினார்கள்.