ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரே படத்தில் சூர்யா, ஆர்யா என்பது ரைமிங்காக இருக்கும். செல்வராகவன் இயக்கத்தில் 'என்ஜிகே' படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து அவருடைய அபிமான இயக்குனரான கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போதைக்கு மிகப் பெரும் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் லைகா இப்படத்தைத் தயாரிக்கிறது.
சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கும் இந்தப் படத்தின் பூஜை கடந்த மாதம் லண்டனில் உள்ள லைகா அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் சூர்யா, சாயிஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தப் படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஆர்யாவும் இணைகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். சூர்யா உடன் ஆர்யா இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை.
ஆர்யா இதற்கு முன் மாதவன் உடன் 'வேட்டை' படத்திலும், அஜித் உடன் 'ஆரம்பம்' படத்திலும், விஷால் உடன் 'அவன் இவன்' படத்திலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் 'புறம்போக்கு என்கிற பொது உடமை' படத்திலும், பாபிசிம்ஹா, ராணா டகுபட்டி ஆகியோருடன் 'பெங்களூர் நாட்கள்' ஆகிய படத்திலும் நடித்திருக்கிறார்.
ஆனால், விஷால் நடித்து சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற 'இரும்புத்திரை' படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இப்போது சூர்யா படத்தில் ஆர்யா தான் வில்லன் என்ற பேச்சு எழுந்துள்ளது. விஷால் படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த ஆர்யா, சூர்யா படத்தில் மட்டும் எப்படி நடிக்க சம்மதித்துள்ளார் என்பது ஆச்சரியமாக உள்ளது.