மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகர் லாரன்ஸ், டைரக்டர் ராசுமதுரவன் கூட்டணியில் அடுத்து உருவாகும் புதிய படத்திற்கு பரமன் என்று பெயரிட்டுள்ளனர். டைரக்டர் ராசு மதுரவன் மற்றும் நடன இயக்குநரும், நடிகருமான லாரன்ஸ் இணைந்து உருவாக்கிய பாண்டி படம் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த வெற்றிக் கூட்டணி தற்போது பரமன் படத்தின் மூலம் மீண்டும் இணைகிறது.
இதுபற்றி ராசு மதுரவன் அளித்துள்ள பேட்டியில், தற்போது மைக்செட் பாண்டி என்ற படத்தை சபரிஷ் மற்றும் சுனைனாவை வைத்து இயக்கி வருகிறேன். இப்படத்தை முடித்த பிறகு லாரன்சுடன் இணைந்து பரமன் படத்தை இயக்க உள்ளேன். லாரன்சுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன், என்று கூறியுள்ளார். உணர்வு பூர்வமான குடும்பக் கதைகளை படமாக்கி வெற்றி பெற்றுவரும் ராசு மதுரவன், பாண்டி, மாயாண்டி குடும்பத்தார் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அடுத்து 2025 என்ற பெயரில் முப்பரிமாண (3டி) படம் ஒன்றை இயக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.