அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தோல்விப்படங்களைக் கொடுத்தாலும் அடுத்தடுத்து படங்களை இயக்கிக் கொண்டு பிசியாகவே இருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். வனமகன், தியா (கரு) படங்களைத் தொடர்ந்து, தற்போது பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 'லஷ்மி' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் ஏ.எல்.விஜய்.
லஷ்மி படத்தையடுத்து, ஜி.வி. பிரகாஷ்குமார் நடிப்பில் அடுத்த படத்தை இயக்குகிறார். ஹாரர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் 30 நாட்களாக நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது.
இதைத் தொடர்ந்து, நயன்தாரா நடிக்க கதாநாயகியை மையமாகக் கொண்ட படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப்படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ.5.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தேவி படத்தின் 2 ஆம் பாகம், அதையடுத்து விக்ரம் நடிக்கும் படம் என ஏ.எல்.விஜய் அடுத்தடுத்து படங்களை இயக்குகிறார்.