'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தியத் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டார் என 67 வயது ஆன பின்னும் ரஜினிகாந்த் மீது தனிப் பெரும் இமேஜ் இருந்தது. ஆனால், அந்த இமேஜ் சமீப காலமாக குறைந்து வருகிறது. அதிலும் 'காலா' படத்தின் தோல்விக்குப் பிறகு அது இன்னும் அதிகமானது.
அந்தப் படத்தில் ரஜினிகாந்த் செய்த பல்வேறு விஷயங்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின. நிழலுக்கும், நிஜத்திற்கும் இடையே பெரிய வித்தியாசத்தை ரஜினிகாந்த் கடைபிடித்து வருகிறார். காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்துபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் பேசினார்.
'கோச்சடையான்' பட விவகாரத்தில் ஆட் பீரோ நிறுவனத்திற்கு பணத்தைத் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் அந்த நிறுவனத்திற்கு பணத்தைத் தரவில்லை. இதனால், நேற்று நடந்த விசாரணையில் உச்சநீதி மன்றம் அவருக்கு கெடு விதித்து, 10ம் தேதிக்குள் பணத்தைச் செலுத்த வேண்டும் என்று எச்சரித்தது.
தமிழக மக்களை சட்டத்தை மீறக் கூடாது என்று சொன்ன ரஜினிகாந்த், அவருடைய மனைவிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் பணம் கொடுக்காமல் இருந்ததும் சட்ட மீறல் தானே என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழும்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் எதுவும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார் ரஜினிகாந்த். இதனால் ரஜினிகாந்தின் இமேஜ் மேலும் பாதிப்புக்குள்ளாகும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.