ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்த் திரையுலகத்தில் தங்களது முதல் படங்களிலேயே பலரையும் வியக்க வைத்து, திரையுலகத்தினரையும், ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அவர்களில் 'சுப்பிரமணியபுரம்' படம் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமான சசிகுமார் ஒருவர்.
2008ம் வருடம் ஜூலை 4ம் தேதி வெளிவந்த இந்தப் படம் யாரும் எதிர்பார்க்காத ஒரு படமாக அமைந்தது. 1980களில் நடக்கும் அரசியல் பின்னணி கொண்ட கதையாக வெளிவந்த இந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக வரலாற்றில் இடம் பிடித்தது.
சசிகுமார் இயக்கி, நாயகனாக நடிக்க மற்றொரு நாயகனாக ஜெய் நடிக்க, நாயகியாக சுவாதி நடித்தார். முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்தனர். அவர்கள் மட்டுமல்லாது படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்த மாரி, விசித்ரன், மோகன் என பலரும் அவரவர் கதாபாத்திரங்களில் வாழ்ந்திருந்தனர்.
ஜேம்ஸ் வசந்தன் இசையில் தாமரை எழுதிய 'கண்கள் இரண்டால்...' பாடல் அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது. இன்று வரையிலும் ஒரு எவர்கிரீன் பாடலாக இருக்கிறது.
மதுரை சுப்பிரமணியபுரத்தின் கதைக்களம், 80களின் நடக்கும் கதை என்பதால் அதற்கான சுற்றுப்புறம், பின்னணியில் இளையராஜாவின் 'சிறு பொன்மணி அசையும்..' பாடல் என சின்னச் சின்ன விஷயங்களையும் ரசனையாய் வெளிப்படுத்திய படம்.
இப்படி ஒரு படத்தை மீண்டும் சசிகுமாரால் கூட எடுக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.