ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சுமார் 75 ஆண்டுகள் சினிமாவில் நடித்து வரும் நடிகர் நாகேஸ்வரராவுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ். 89 வயது ஆகும் இவர் கடந்த 75 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். சுமார் 180க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நாகேஸ்வரராவின் திரையுலக சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்மவிபூஷன் விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. தாதா சாகேப் பால்கே விருதும் பெற்றுள்ளார்.
75 வருடங்கள் சினிமாவில் நடித்து வரும் நாகேஸ்வரராவுக்கு ஐதராபாத்தில் பாராட்டு விழா நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகினர் திரண்டு வாழ்த்தினார்கள். பழம்பெரும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். நடிகைகள் சரோஜாதேவி, வைஜெயந்தி மாலா, மஞ்சுளா, அஞ்சலிதேவி, ஜமுனா, ஜெயசுதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தார்கள். நடிகைகள் நயன்தாரா, மீனா, ரம்யாகிருஷ்ணன், தபு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினர்.