தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினி நடித்த அனிமேஷன் படமான கோச்சடையான் படத்தை தயாரித்தது தொடர்பா மீடியா ஒன் குளோபல் நிறுவனத்திற்கு ஆட்பீரோ என்ற நிறுவனம் கடன் அளித்திருந்தது.
இந்தக் கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்ததாகவும், 'கோச்சடையான்' உரிமையை ஆட் பீரோ நிறுவனத்திற்கு வழங்க குளோபல் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் சொன்னபடி பட உரிமையை தரவில்லை, கொடுத்த கடனையும் திருப்பி செலுத்தவில்லை.
இதையடுத்து, ஆட் பீரோ நிறுவனம் கோர்ட் வரை சென்றது. இந்த வழக்கின் மீதான விசாரணையில் கடந்த பிரப்ரவரி மாதம், லதா ரஜினிகாந்த், ஆட்பீரோ நிறுவனத்திற்கு 3 மாதங்களில் பணத்தை திருப்பி கொடுக்க கெடு விதிக்கப்பட்டது. தொடர்ந்து ஏப்., 16-ம் தேதி நடந்த விசாரணையில், ஜூலை 3-க்குள் லதா ரஜினியோ அல்லது மீடியா ஒன் குளோபல் நிறுவனமோ, ஆட் பீரோ நிறுவனத்திற்கு பணத்தை திருப்பி செலுத்த உத்தரவிட்டப்பட்டது.
ஆனால் சொன்ன தேதியில் பணத்தை லதா திருப்பி செலுத்தவில்லை. இதனால் இந்த வழக்கு இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. எப்போது பணத்தை கொடுப்பீர்கள் என லதாவிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியதோடு, வருகிற 10-ம் தேதிக்குள் பணத்தை செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளது.