நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? |
நடிகர்கள் அரசியலில் ஈடுபடுபது தென்னிந்தியாவில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நடிகர்கள் முதல்வர்களாகவே பணியாற்றி உள்ளார்கள். தமிழ் சினிமாவில் நடிகராக இருந்த எம்ஜிஆர்., நடிகையாக இருந்த ஜெயலலிதா ஆகியோர் தமிழக முதல்வர்களாக பணியாற்றி இந்திய அரசியலிலும் கவனிக்கப்படுபவர்களாக இருந்தனர்.
ஆந்திராவில் என்டிஆர் தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்து முதல்வராகப் பணியாற்றி மறைந்தார். அவருடைய மறைவுக்குப் பின் மருமகன் சந்திரபாபு நாயுடு கட்டுப்பாட்டில் கட்சி வந்தது. தற்போது அவர் ஆந்திரா முதல்வராகப் பணியாற்றி வருகிறார்.
தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை ஆரம்பித்து தேர்தலில் நின்றார். அதன்பின் கட்சியைக் காங்கிரசுடன் இணைத்தார். இருப்பினும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. இப்போது சிரஞ்சீவியின் கடைசி தம்பியான பவன்கல்யாண் 'ஜனசேனா' கட்சியை ஆரம்பித்து பல்வேறு பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்து வருகிறார்.
அடுத்து ஆந்திரா, தெலுங்கானாவில் நடைபெற உள்ள தேர்தலில் பவன்கல்யாண் கட்சி பெரிய வெற்றி பெற அதற்கான திட்டங்களை அமல்படுத்த சிரஞ்சீவி இப்போதே இறங்கிவிட்டார் என்கிறார்கள். அவர்களுடைய குடும்பமே பவன்கல்யாணை முதல்வராக்க வேண்டும் என பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார்களாம்.