டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'சஞ்சு' படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியானது. வெளியான மூன்றே நாளில் இந்தப் படம் 100 கோடி ரூபாயை வசூலித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
'பாகுபலி 2' படம்தான் இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலைப் பெற்ற படம் என்ற சாதனையைப் படைத்திருந்தது. அந்தப் படம் முதல் நாளில் 46.5 கோடி வசூலைப் பெற்றது. அந்த சாதனையை 46.71 கோடி வசூலித்து 'சஞ்சு' படம் முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சஞ்சய் தத் எந்த தவறும் செய்யாதவர், சந்தர்ப்ப சூழ்நிலைதான் அவரை சிறைக்குச் செல்ல வைத்தது என்ற ரீதியில் எடுக்கப்பட்டுள்ள 'சஞ்சு' படம் விமர்சன ரீதியாகவும் பல்வேறு கருத்துக்களை எழ வைத்துள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் படத்தின் வசூல் சாதனை புரியும் அளவிற்கு அமைந்திருப்பது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. விரைவில் இந்தப் படம் 300 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிடும் என்கிறார்கள்.
'பாகுபலி 2' போன்ற பிரம்மாண்டமான படத்தின் வசூலை, குற்றம் செய்து தண்டனை அனுபவித்த ஒரு நடிகரின் வாழ்க்கை வரலாற்றுப் படம் மிஞ்சியிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.