ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தன் மகன் கவுதம் கார்த்திக்குடன் கார்த்திக் நடித்திருக்கும் மிஸ்டர் சந்திரமவுலி படம் வருகிற 6ந் தேதி வெளிவருகிறது. இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த கார்த்திக் கூறியதாவது...
என் மகன் கவுதம் என்னிடம் இந்த கதையை சொல்லி பிடித்திருந்தால் நடியுங்கள் என்று சொன்னான். தலைப்பே என்னுடையது என்பதால் உடனே பிடித்தது. கதை கேட்டேன். வழக்கமான அப்பா மகன் கதையாக இல்லாமல் வித்தியாசமாக இருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். நல்ல கேரக்டர்களாக வந்தால் தொடர்ந்து நடிப்பேன். நான் நடிக்க விரும்பும் கனவு கேரக்டர் ஒன்று இருக்கிறது. அந்த கதையை நானே எழுதி உள்ளேன். அதை நானே இயக்கவும் செய்வேன். மூன்று கதைகள் என்னிடம் தயாராக உள்ளது.
இப்போது நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அரசியலில் நான் சீனியர் என்ற முறையில் அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அரசியலுக்கு வந்தால் முழுநேர அரசயில்வாதியாக வாருங்கள். சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியல் செய்ய முடியாது. இப்போது நான் அரசியலை விட்டு விலகி நிற்கிறேன். அதற்கு காரணம் முழுநேர அரசியல்வாதியாக இல்லாமல் போனதுதான். நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அவர்கள் மூலமாவது நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும். நானும் மீண்டும் அரசியலுக்கு வருவேன். முன்பை விட பலமாக, முழுநேர அரசியல்வாதியாக புறப்பட்டு வருவேன். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. என்றார் கார்த்திக்.