'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திலீப், மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார். தற்போது மீண்டும் அவரை சேர்த்துக்கொள்ள மலையாள நடிகர் சங்க பொதுக்குழு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கன்னட நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கன்னட நடிகர் சங்கம், மலையாள நடிகர் சங்க பொதுச் செயலாளர் இடைவேளை பாபுவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
நடிகை வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தது ஏற்கத்தக்கதல்ல. மலையாள நடிகர் சங்கத்தின் இந்த தீர்மானம் அதிர்ச்சியை அளிக்கிறது. துரதிருஷ்டவசமான இந்த முடிவை அவர்கள் வாபஸ் பெற வேண்டும். நீதிமன்றம் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பளிப்பதற்கு முன் திலீப்பை மீண்டும் உறுப்பினராக சேர்த்தது சமூகத்திற்கு தவறான தகவலை அளிக்கும். நடிகைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது நடிகர் சங்கத்தின் கடமையாகும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மலையாள நடிகர் சங்க விவகாரத்தில் கன்னட நடிகர் சங்கம் நேரடியாக தலையிட்டிருப்பது மலையாள சினிமாவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.