பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சென்னை உங்களை வரவேற்கிறது படத்தை இயக்கிய மருதுபாண்டி இயக்கத்தில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா, எழுத்தாளர் வசுமித்ரா, ஸ்ரீஜித் ரவி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கும் அசுரவதம் படம் கடந்த வாரம் வெளியானது.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சசிகுமார் நடிப்பில் வெளியான சில படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தன.
இந்நிலையில் அசுரவதம் படம் தனக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார் சசிகுமார். ஆனால் வழக்கமான பழி வாங்கும் கதையாக எடுக்கப்பட்டதால் அசுரவதம் படத்துக்கு மக்களிடம் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இதற்கிடையில் அசுரவதம் படத்தை இயக்குநர் மருதுபாண்டியை சுதந்திரமாக இயக்கவிடாமல் சசிகுமார் தலையிட்டதோடு, தன்னுடைய நண்பரான ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரை பாதி படத்தை இயக்கவைத்தார் என்றும் தகவல் அடிபடுகிறது.
அதனால்தான் இயக்குநரால் இந்தப்படத்தை வெற்றிப்படமாக கொடுக்கமுடியவில்லை என்றும், ஸ்கிரிப்ட்டில் உள்ளதுபோல் படத்தை எடுக்கவில்லை என்றும் அந்தப்படத்தில் பணியாற்றியவர்கள் சொல்கிறார்கள்.