மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சென்னை உங்களை வரவேற்கிறது படத்தை இயக்கிய மருதுபாண்டி இயக்கத்தில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா, எழுத்தாளர் வசுமித்ரா, ஸ்ரீஜித் ரவி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கும் அசுரவதம் படம் கடந்த வாரம் வெளியானது.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சசிகுமார் நடிப்பில் வெளியான சில படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தன.
இந்நிலையில் அசுரவதம் படம் தனக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார் சசிகுமார். ஆனால் வழக்கமான பழி வாங்கும் கதையாக எடுக்கப்பட்டதால் அசுரவதம் படத்துக்கு மக்களிடம் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இதற்கிடையில் அசுரவதம் படத்தை இயக்குநர் மருதுபாண்டியை சுதந்திரமாக இயக்கவிடாமல் சசிகுமார் தலையிட்டதோடு, தன்னுடைய நண்பரான ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரை பாதி படத்தை இயக்கவைத்தார் என்றும் தகவல் அடிபடுகிறது.
அதனால்தான் இயக்குநரால் இந்தப்படத்தை வெற்றிப்படமாக கொடுக்கமுடியவில்லை என்றும், ஸ்கிரிப்ட்டில் உள்ளதுபோல் படத்தை எடுக்கவில்லை என்றும் அந்தப்படத்தில் பணியாற்றியவர்கள் சொல்கிறார்கள்.