சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
பாணாகாத்தாடி படத்தை தொடர்ந்து இயக்குனர் பத்ரி வெங்கடேஷும் அதர்வாவும் மீண்டும் இணைந்த படம் செம போத ஆகாதே. இந்தப் படத்தின் மூலம் அதர்வா தயாரிப்பாளரானார்.
இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக மிஷ்டி, அனைகா சோடி நடித்துள்ளனர்., ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா முதலானோரும் நடித்திருக்கும் இந்தப்படம் அதிரடி ஆக்ஷன் கலந்த படமாக உருவாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை கோபி அமர்நாத் கவனித்துள்ளார்.
நடிகராக வெற்றிபெற்ற அதர்வாவுக்கு இந்தப்படம் ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் மிகப்பெரிய சோதனையைக் கொடுத்துவிட்டது.
செம போதை ஆகாதே படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸை திலகர் படத்தை தயாரித்த எட்செட்ரா படநிறுவனம் வாங்கியது.
படத்தின் ரிலீஸுக்கு முந்தையநாள் விநியோகஸ்தர்களிடம் எதிர்பார்த்த பணம் வராமல்போனது. அதனால் 75 லட்சம் பற்றாக்குறை ஏற்பட்டது. அந்தப்படத்தை புரட்ட முடியாமல்போனதால் செம போதை ஆகாதே திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால் கடும் அப்செட்டான அதர்வா போனை ஸ்விட்சு ஆப் செய்துவிட்டு தொடர்புஎல்லையைவிட்டு போய்விட்டார்.
கடைசியில் கவுன்சில் உதவியுடன் அன்று மாலைதான் படம் திரைக்கு வந்திருக்கிறது. ஆனாலும் முதல் இரண்டு காட்சிகளின் வசூலை இழந்துவிட்டார் அதர்வா.