ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சில ஆண்டுகளுக்கு முன்பு பாலா இயக்கிய படம் அவன் இவன். ஆர்யா, விஷால் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் மற்றும் சொரிமுத்து அய்யனார் ஆகியோர் பற்றி படத்தில் தவறாக சித்தரித்திருப்பதாக சிங்கம்பட்டி ஜமீன்தார் மகன் ஆத்மஜன் அம்பாசமுத்திரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்த 20ந் தேதி ஆர்யா, பாலா, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியோர் ஆஜரானார்கள். இதில் கல்பாத்தி அகோரம் "நான் படத்தின் தயாரிப்பாளர் மட்டும்தான். படத்தின் கண்டெண்ட் பற்றி தனக்கு தெரியாது" என்ற வாக்குமூலத்தை ஏற்று அவரை வழக்கிலிருந்து விடுவித்தது நீதிமன்றம். பாலா, ஆர்யாவுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டு மீண்டும் விசாரணை நடக்கும்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது நீதிமன்றம்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாலாவும், ஆர்யாவும் ஆஜராகவில்லை. அவர்களுக்கு பதிலாக அவர்களது வக்கீல் ஆஜராகி விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம். ஆர்யா, பாலா இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு பிடிவாரண்ட் பிறப்பித்து போலீசுக்கு உத்தரவிட்டது.