'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் தம்பி ராமைய்யா. மைனா படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற அவர், அதன்பிறகு முழுநேர நடிகராகி விட்டார்.
அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தில் அறிமுகமான தனது மகன் உமாபதி ராமைய்யாவை வைத்து, தற்போது மணியார் குடும்பம் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ள தம்பி ராமைய்யா, இந்த படத்திற்கு தானே பாடல் எழுதி, இசையமைத்தும் இருக்கிறார்.
உமாபதி ராமைய்யா, மிர்துளா, சமுத்திர கனி, ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, பவன் என பலர் நடித்துள்ள இந்த படத்தில் தம்பி ராமைய்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில், பேசிய பலரும் தம்பிராமைய்யாவின் திறமையை பெருமையாக சொன்னவர்கள், அவர் பெயரை காப்பாற்றும் வகையில் உமாபதியும் பெரிய நடிகராக வேண்டும் என்று வாழ்த்தி பேசினார்கள்.
ஆனால், நடிகர் சூரி பேசும்போது, தம்பி ராமைய்யா அண்ணன் எந்த ஸ்பாட்டில் இருந்தாலும் ஒரு எனர்ஜி இருக்கும். அந்த அளவுக்கு ஜாலியாக இருப்பார். அதோடு, அவர் கேரவனை விட்டு வெளியே வந்ததும் குதிரை கத்துவது போன்று ஒரு சவுண்டு விடுவார். அதை வைத்து அண்ணன் ரெடியாகி ஸ்பாட்டுக்குள் வந்து விட்டார் என்பதை நாங்கள் தெரிந்து கொள்வோம்.
அதேபோல், ஸ்பாட்டில் எப்போதும் ஜாலியாக அரட்டையடிக்கும் அவர் ஒருநாள், எனக்கு 50 வயசுக்கு மேல ஆகிடுச்சு. ஆனாலும் இன்னும் பத்து கல்யாணம் கூட நான் பண்ணுவேன். அந்த அளவுக்கு நான் இன்னும் புல் எனர்ஜியா இருக்கேன் என்று சொன்னார். இதை இந்த விழாவுக்கு வந்திருந்த தம்பி ராமைய்யாவின் மனைவி முன்னிலையில் காமெடியாக சூரி சொல்ல, சிரிப்பலையில் அரங்கமே அதிர்ந்தது.
விழாவில் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், கே.பாக்யராஜ், பிரபுசாலமன், சேரன், கரு.பழனியப்பன், சீனுராமசாமி, சூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.