துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
தரமணி படத்திற்கு பிறகு ராம் இயக்கி உள்ள படம் பேரன்பு. தியேட்டர்களில் இன்னும் வெளியாகாத இந்தப் படம் உலக பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்று வருகிறது. பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ளார். மம்முட்டி, அஞ்சலி, சமுத்திரகனி, வடிவுக்கரசி. லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள், யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் அஞ்சலி தான் ஹீரோயின், அவர் மம்முட்டியின் மனைவியாக நடிக்கிறார் என்றே செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது தரமணி படத்தில் அஞ்சலி சிறப்பு தோற்றத்தில் நடித்து போன்று இதிலும் சிறப்புத் தோற்றத்திலேயே நடித்துள்ளார். படத்தின் ஹீரோயின் அஞ்சலி அமீர் என்று இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. யார் இந்த அஞ்சலி அமீர்.
கேரளாவில் பிரபலமான திருநங்கை இவர். டி.வி.ஷோக்களில், படங்களில் நடித்து பிரபலமாகியிருக்கிறார். ஒரு ஷோவில் இவரை பார்த்து விட்டு பேரன்பு படத்தில் நடிக்க சிபாரிசு செய்ததே மம்முட்டி தான் என்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த அஞ்சலி அமீர், முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். இவர் 8 மாத குழந்தையாக இருந்தபோது தாய் இறந்துவிட்டார். தந்தை மறுமணம் செய்து கொண்டார். ஷாம்சீர் என்ற பெயரில் ஆணாக இருந்தவர். அதன் பிறகு சென்னை வந்து அஞ்சலி என்ற பெண்ணாக மாறினார். பட்டப்படிப்பு, சமூக சேவை என பிசியான அஞ்சலி இப்போது நடிகை ஆகிவிட்டார். அதுவும் தமிழ் படத்தில்.