ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமா எதை நோக்கி போய் கொண்டு இருக்கிறது என்றே தெரியவில்லை. படங்களில் இலைமறை காய்மறையாக பேசப்பட்டு வந்த இரட்டைஅர்த்த வசனங்களும், காட்சிகளும் இப்போது நேரடியாகவே காட்சிகளாகவும், வசனங்களாகவும் இடம்பெற்று வருகின்றன. அதை படத்தின் தலைப்பிலும் அப்பட்டமாக வெளிப்படுத்தி வரும் வக்கிர போக்கும் தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில் இதற்கு பிள்ளையார்சுழி போட்டு ஆரம்பித்து வைத்தவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரது இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் ஆபாசமாக வார்த்தைகளுடன் வெளிவந்தன. இந்தப்படம் எதிர்பாரதவிதமாக வணிக ரீதியில் வெற்றியும் பெற்றது.
இவரைத்தொடர்ந்து சந்தோஷ் பி ஜெயக்குமார் என்பவர், த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை மிஞ்சும் அளவுக்கு இன்னும் ஆபாசமாக ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து என இரண்டு படங்களை கொடுத்தார். உண்மையில் படுகேவலமான இந்தப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றன.
இதுபோன்ற படங்களை எடுத்து இளைஞர்களை கவரலாம், நன்றாக கல்லா கட்டலாம் என்ற ஆசை பல இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளன. அதன்வெளிப்பாடு தான் தற்போது, "பல்லு படாம பார்த்துகோ, ஒண்ணு போதும் நின்னும் பேசும்" போன்ற படங்கள் தயாராகி வருகின்றன.
இதில், "ஒண்ணு போதும் நின்னும் பேசும்" படத்தின் அறிமுக டீஸர் ஒன்று வெளியாகி இருக்கிறது. இதில் பின்னணியில் ஒருவர் பேசும் குரல் இரட்டை அர்த்த வசனங்களை பிரதிபலிக்கிறது. கூடவே படத்தின் தலைப்பும் ஆபாசத்தை சித்தரிப்பது போன்று உள்ளது.
இப்படியான படங்கள் அதிகளவில் வர தொடங்கி இருப்பதை பார்த்தால் சமூகம் எங்கு போய் முடியுமோ என்ற கேள்வி உடன், தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட சாபக்கேடோ என எண்ணவும் தோன்றுகிறது.