'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மகாநதி படத்திற்கு பிறகு தெலுங்கில் சில படவாய்ப்புகள் தேடி வந்தபோதும், எந்த படத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை கீர்த்தி சுரேஷ். தமிழில் சர்கார், சாமி-2, சண்டக்கோழி-2 என பிசியாக நடித்து வருவதாக சொல்லி தேடி வந்த தெலுங்குப்பட வாய்ப்புகளை திருப்பி அனுப்பி வருகிறார்.
இந்நிலையில், தற்போது அவர் புதிய தெலுங்கு படங்களில் கமிட்டாகாமல் இருப்பதற்கு காரணம், ராஜமவுலி இயக்கும் புதிய படம் தான் என்கிற செய்தி வெளியாகியிருக்கிறது.
அதாவது, ஜூனியர் என்டிஆர், ராம் சரணை வைத்து ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் கீர்த்தி சுரேசும் ஒரு லீடு ரோலில் நடிக்கிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது.