தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தயாரிப்பாளர்களை பாடாய்படுத்துகிற நடிகர்களில் முதலிடத்தில் இருந்தவர் சிம்பு. அப்பேர்பட்ட சிம்புவிடம் இப்போது அநியாயத்துக்கு மாற்றம். மணிரத்னம் இயக்கத்தில் 'செக்க சிவந்த வானம்' படத்தில் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் நடித்து முடித்து திரையுலகினரை ஆச்சர்யப்படுத்தினார் சிம்பு.
அடுத்து அரை டஜன் படங்களில் நடிக்க வாய்வழியாக ஒப்புதம் கொடுத்திருக்கிறார். அடுத்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதற்கிடையில் 'துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கி திரையுலகின் கவனத்தை ஈர்த்து, இப்போது 'நரகாசூரன்', 'நாடகமேடை' ஆகிய படங்களை இயக்கி வரும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
அஜித் நடிப்பில் 'வீரம்', விஜய் நடிப்பில் 'பைரவா' முதலான படங்களை தயாரித்த பிரபல விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகவிருப்பதாக சொல்லப்படுகிறது.