டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் பவன் கல்யாணும் ஒருவர். சிரஞ்சீவியின் தம்பியான இவர், தற்போது அரசியல் கட்சியும் தொடங்கியிருக்கிறார். பவன் கல்யாணின் முன்னாள் மனைவி நடிகை ரேணு தேசாய். இவர்களுக்கு அகிரா, ஆத்யா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளன. கடந்த 2012ம் ஆண்டு, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.
அதன்பிறகு பவன் கல்யாண் மறுமணம் செய்து கொண்டார். ரேணு தேசாயும் தற்போது மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அவருக்கு ஒருவருடன் நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது.
இந்த போட்டோக்கள் வெளியானதையடுத்து, ரேணுதேசாய் மறுமணம் செய்வதற்கு பவன்கல்யாண் ரசிகர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் அவரை மிரட்டும் வகையில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அதேசமயம், பவன் கல்யாணோ, ரேணு தேசாயின் மறுமணத்திற்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். "வாழ்க்கையின் புதிய கட்டத்துக்கு நுழையும் ரேணுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆரோக்கியம், அமைதி மற்றும் செழிப்புடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்" என டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.