'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டிமான்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா, அதர்வா, ராசிகண்ணா, அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவின் கணவராக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதன் இசை வெளியீடு இன்று காலை சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில், படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டபோதும் படத்தின் நாயகனான அதர்வா, படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. அதனால் படத்தின் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதியை முன்னிறுத்தி விழா நடைபெற்றது.
விழாவில் இயக்குனர் அஜய் ஞானமுத்து பேசுகையில், இமைக்கா நொடிகள் படம் ஒரு திரில்லர் கதையில் உருவாகியிருக்கிறது. அதர்வாவை வைத்துதான் முதலில் இந்த படத்தை தொடங்கினோம். அதன்பிறகு படத்தில் ஒரு சிபிஐ கேரக்டர் இருந்தது. அதை பெண் வேடமாக மாற்ற திட்டமிட்டபோது தான் நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்தோம்.
நயன்தாராவுக்கு, ஒரு சைக்கோவுக்குமிடையே நடக்கும் அதிரடிப் போர் தான் இந்த படம். நயன்தாராவின் தம்பியாக அதர்வாவும், அவரது காதலியாக ராசி கண்ணாவும் நடித்துள்ளனர். சைக்கோ கில்லர் வேடத்தில் ஹிந்திப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் நடித்துள்ளார். அவருக்கு இயக்குநர் மகிழ்திருமேனி டப்பிங் கொடுத்துள்ளார்.
நான் இயக்கிய டிமான்டி காலனி ரசிகர்களுக்கு எப்படி ஒரு புது ஜானராக இருந்ததோ அதேபோன்று இந்த படமும் புதுமையாக இருக்கும். வித்தியாசமான ஒரு படத்தை பார்த்த திருப்தியை கொடுக்கும்.
படத்தில் இளைஞர்களுக்கு பிடித்தமான நான்கு கமர்சியல் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா. இன்னும் பின்னணி இசைப்பணிகள் நடக்கவில்லை. அதிலும் அவர் ஸ்கோர் பண்ணுவார் என்று எதிர்பார்க்கிறேன்.
முக்கியமாக, ஆர்.டி. ராஜசேகர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பள்ளியில் படித்து வந்தபோதே அவரது ரசிகன் நான். அவரது ஒளிப்பதிவு இந்த படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளது என்றார்.