ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் ஞான் மேரிக்குட்டி என்கிற படம் வெளியானது. ரஞ்சித் சங்கர் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படம் திருநங்கை ஒருவரை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. திருநங்கைகளை மரியாதையாக புதிய கோணத்தில் காட்டியிருந்தனர். படம் வெளியான பின் பத்திரிக்கை விமர்சனம் முதற்கொண்டு, அனைவரிடமும் இருந்து படத்தில் நடித்த ஜெயசூர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
நடிகை அமலாபால் படத்தை பார்த்துவிட்டு ஜெயசூர்யாவையும், இயக்குனர் ரஞ்சித் சங்கரையும் மனதார பாராட்டியுள்ளார். இந்த படம் குறித்து அவர் கூறும்போது, திருநங்கைகளை இப்படியும் நல்ல முறையில் காட்ட முடியுமா என இதுவரை ஒரு சந்தேகம் இருந்தது. அதை இந்த படம் நிவர்த்தி செய்துள்ளது. இதுவரை யாரும் பயணிக்காத சாலையில் பயணம் செய்யும் துணிச்சலை எடுத்ததற்காக ஜெயசூர்யாவுக்கும், படத்தின் இயக்குனர் ரஞ்சித் சங்கருக்கும் பாராட்டுகளை மனதார தெரிவித்து கொள்கிறேன் என அமலாபால் கூறியுள்ளார்.