விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
எப்போதும் இல்லாத வகையில் ஆச்சர்யமாக மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் என இரண்டு சூப்பர் ஸ்டார்களும் ஒரே நபரின் கதையில் நடிக்க இருக்கிறார்கள் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. வரலாற்று வீரனாகிய குஞ்சாலி மரக்காயர் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் மம்முட்டியும், அதே கதையில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லாலும் நடிக்க உள்ளனர்
இதற்கான வேலைகளை இரண்டு இயக்குனர்களும் துவங்கி விட்டனர். இப்படி ஒரே கதையை இரண்டு நடிகர்களும் நடிக்கும் போது எந்த படம் ஓடும் என்று ரசிகர்களுக்கு குழப்பம் வராதா என்ற கேள்வி அனைவருக்கும் எழுவது சகஜம். ஆனால் இந்த படம் எடுப்பதற்கு முன்பாக இயக்குனர் பிரியதர்ஷ்ன் மம்முட்டியிடம் இப்படி ஒரு படம் எடுக்கப்போவதை பற்றி கூறினாராம்.
மம்முட்டி அதை கேட்டுவிட்டு நீங்கள் எடுக்க போகும் படத்திற்கும் நாங்கள் எடுக்கப்போகும் கதைக்கும் எந்த சம்மதமும் இல்லை என்பதை உறுதிபட கூறினாராம் அதன்பிறகே நிம்மதியான ப்ரியஷ்ர்சன், மோகன்லாலை வைத்து வேறு கோணத்தில் படமாக்கும் அறிவிப்பை வெளியிட்டாராம்.