இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? |
குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்ற முதல் இந்தியர் மற்றும் 2வது சர்வதேச வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் சென்னையை சேர்ந்த செஸ் வீரர் பிரக்னாநந்தா. இவருக்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது... பிரக்னாநந்தாவின் சாதனை தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் கிடைத்த பெருமை என அவரின் தந்தை ரமேஷ் பாபுவிடம் தொலைபேசியில் வாழ்த்துக்கள் தெரிவித்தார் கமல். அவரின் குடும்ப சூழலையும் தாண்டி நமக்கு சேர்த்த பெருமை. அவர்பால் நமக்கு இருக்கும் நம்பிக்கையையும், நன்றியினையும் அதிகரிக்க செய்திருக்கிறது. பிரக்னாநந்தா இந்தியா திரும்பியதும் கமல் அவரை சந்திக்க உள்ளார்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.