‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பீச்சாங்கை படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் பாலமுரளி பாலு. அதன் பிறகு ஹரஹரமகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுகுத்து, டிராபிக் ராமசாமி படங்களுக்கு இசை அமைத்தார். தற்போது கஜினிகாந்த், பல்லு படமா பார்த்துக்கணும், தட்றோம் தூக்றோம் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். அவர் கூறியதாவது:
எனது முதல்படமான பீச்சாங்கை தான் எனக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை தேடிக் கொடுத்தது. குறித்த நேரத்திற்குள் இசை அமைத்துக் கொடுப்பது என்கிற பாலிசியை கடைபிடிக்கிறேன். இளம், புதிய இசை அமைப்பாளர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமைகிறது. ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி மாதிரி முன்னணியில் உள்ள இசை அமைப்பாளர்கள் நடிக்கச் சென்று விட்டதால் அவர்கள் இடத்தை பூர்த்தி செய்ய புதிய இசை அமைப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். அந்த இடம்தான் எனக்கு வாய்ப்புகளை பெற்றுத் தருகிறது. இசையின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி நல்ல இசை அமைப்பாளர் என்று பெயர் வாங்க வேண்டும் என்பதே என் விருப்பம். என்கிறார் பாலமுரளி பாலு.