பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பெப்சி அமைப்புக்கும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் மோதல் வலுத்துள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல்ஹாசனுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் தொடர்ந்து தாக்கு பிடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் சுமார் 400 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். லைட்மேன்களில் இருந்து ஒளிப்பதிவாளர்கள் வரை இதில் அடங்குவர். இவர்களில் கமல் உள்பட 41 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அதாவது பெப்சி அமைப்பைச் சேர்ந்தவர்கள். தொழிலாளர்களின் பணி விகிதாச்சாரப்படி தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடந்தால் பெப்சி தொழிலாளர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதன்படி, சுமார் 250 பேருக்கு வேலை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 10 சதவிகிதமே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
"தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் சொந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் மிக மிக குறைந்த அளவில் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளதை கண்டித்து 41 பேரும் இனி பணிபுரிய மாட்டார்கள்" என்று பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார். 41 பேரில் கமலும் அடக்கம் என்பதால் அவர் எங்கள் முடிவுக்கு மதிப்பு அளித்து நிகழ்ச்சியில் பணிபுரிய மாட்டார் என்று நம்புகிறோம் என ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.
பிக்பாஸ் முதல் சீசனிலும் இதே போன்ற பிரச்சினை எழுந்தபோது கமல், தலையிட்டு 50 சதவிகித பணியாளர்கள் பணியாற்ற ஏற்பாடு செய்தார். இந்த முறையும் அப்படி செய்ய கமல் முயற்சிப்பதாகவும், ஆனால் சேனல் தரப்பும், நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனமும் இதற்கு மாற்றுக் கருத்து கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. இதனால் பிக்பாஸில் கமல் தொடர்ந்து நீடிப்பாரா என்ற நிலை உருவாகி உள்ளது.