நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
நடிகர் கமலை தொடர்ந்து விமர்சிப்பதை பழக்கமாக்கி இருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். 'நடிகர் கமல், ராகுலை சந்தித்திருக்கிறாரே; சோனியாவை சந்தித்திருக்கிறாரே?' என்று நிருபர்கள் கேட்டு வைக்க, 'அவர் அமெரிக்க அதிபர் டிரம்பைக் கூட சந்திக்கட்டுமே. அதனால் என்ன ஆகி விடப் போகிறது? அவரால், தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும்; அதிர்வையும் ஏற்படுத்த முடியாது' என்று கேலியாகும் கிண்டலாகவும் பேசி வருகிறார் அமைச்சர் ஜெயக்குமார்.
இப்படி அவர் பேசி வருவதற்கு பதில் அளித்த கமல், அமைச்சர் ஜெயக்குமார் எனக்கு பி.ஆர்.ஓ.,வாக மாறி விட்டார்' என பதிலடி கொடுத்துப் பார்த்தார். ஆனாலும், ஜெயக்குமாரின் விமர்சனங்கள் தொடர்ந்தன. இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சிக்கும் பொறுப்பை, மக்கள் நீதி மையத்தின் பொறுப்பாளர் நடிகை ஸ்ரீப்ரியாவிடம் கொடுத்திருக்கிறார் கமல்.
அதையடுத்து, அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுக்கத் துவங்கி இருக்கும் ஸ்ரீப்ரியா, 'காமெடிக்கென்று ஒரு துறை வைத்துக் கொண்டு, ஆட்சி நடத்துவது அ.தி.மு.க., தான். அதுவும், அந்தத் துறைக்கு அமைச்சராக இருப்பவர் ஜெயக்குமார். அவர்கள் செய்யும் காமெடிக்கு, அவர்களே சிரித்துக் கொள்கிறார்கள்' என விமர்சித்துள்ளார். தொடர்ந்து, ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக, மையம் கட்சியினர் கூறுகின்றனர்.