பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
அதர்வா நடித்த முதல் படமான பாணா காத்தாடியை இயக்கிய பத்ரி வெங்கடேஷ், தற்போது இயக்கியுள்ள படம் செம போத ஆகாதே. இந்த படம் ஜூன் 29-ந்தேதி திரைக்கு வருகிறது. அதர்வாவுடன் மிஸ்தி, அனைகா சோட்டி, கருணாகரன், மனோபாலா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கிக்காஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் முதன்முதலாக அதர்வாவே தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் பிரஸ்மீட் இன்று காலை 11 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. அப்போது செம போத ஆகாதே படம் குறித்து அதர்வா பேசும்போது, இதற்கு முன்பு படம் தயாரித்தவர்கள் பட்ட கஷ்டங்களை சொல்வதை கேட்டிருக்கிறேன். அந்த கஷ்டங்களை இப்போது நான் படம் தயாரித்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவது சாதாரண விசயமல்ல.
எதிர்காலத்தில் சந்தர்ப்பம் அமையும்போது எனது பேனரில் மற்ற நடிகர்களை வைத்தும் படம் தயாரிப்பேன். படத்தின் தலைப்பு செம போத ஆகாதே என்று இருப்பதால் இது போதை சம்பந்தப்பட்ட படம் என்று நினைக்கிறார்கள். இது போதைக்கு எதிரான படம். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை சொல்லும் படம். செம போதயில் இருக்கும் ஒருவன் எந்தமாதிரியான பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறான். அதன் பின்விளைவுகள் அவன் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதை சொல்லும் படம்.
அந்த வகையில், சமூகத்துக்கு இது நல்லதொரு மெசேஜ் சொல்லும் படமாக இருக்கும். சீன் பை சீன் சிரித்து மகிழக்கூடிய வகையில், பக்கா கமர்சியலாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் பத்ரி வெங்கடேஷ். அவர் சினிமாவைப்பற்றி நிறைய அறிவு கொண்டவர். இந்த படத்திற்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் பெரிய இயக்குனராகி விடுவார் என்றார் அதர்வா.