டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடித்த மகாநதி படம், கீர்த்தி சுரேஷை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றது. அதுவரை அவரை நார்மலான ஒரு நடிகையாக பார்த்து வந்த சினிமா வட்டாரம் அவரை பெருமையாக பார்க்கத் தொடங்கியது. என்றாலும், அந்த படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷிற்கு பல படங்கள் புக்காகிவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்னும் ஒரு புதிய படத்தில் கூட அவர் ஒப்பந்தமாகவில்லை.
இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், மகாநதி படத்தில் நடிப்பதற்கு முன்பே நான் தமிழில் விஜய், விக்ரம், விஷால் போன்ற முன்ணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகியிருந்தேன். ஆனால் மகாநதி படத்தில் நான் கதையின் நாயகியாக சாவித்ரி வேடத்தில் நடித்ததால் அதிகப்படியான கால்சீட் தேவைப்பட்டபோது, எனக்காக அந்த படக்குழுவினர் நிறையவே விட்டுக்கொடுத்தார்கள்.
விஜய்யின் சர்கார் படத்தில் நடிக்க ஏற்கனவே கால்சீட் கொடுத்திருந்தும் மகாநதியை நான் முடித்து விட்டு வரும் வரை எனக்காக காத்திருந்தார்கள். அந்த படத்தை முடித்த பிறகுதான் விஜய் படத்தில் நடித்தேன். அதேப்போல் விக்ரம், விஷால் படங்களிலும் அடுத்தடுத்து கால்சீட் கொடுத்து நடித்தேன்.