தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடித்த மகாநதி படம், கீர்த்தி சுரேஷை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றது. அதுவரை அவரை நார்மலான ஒரு நடிகையாக பார்த்து வந்த சினிமா வட்டாரம் அவரை பெருமையாக பார்க்கத் தொடங்கியது. என்றாலும், அந்த படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷிற்கு பல படங்கள் புக்காகிவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்னும் ஒரு புதிய படத்தில் கூட அவர் ஒப்பந்தமாகவில்லை.
இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், மகாநதி படத்தில் நடிப்பதற்கு முன்பே நான் தமிழில் விஜய், விக்ரம், விஷால் போன்ற முன்ணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகியிருந்தேன். ஆனால் மகாநதி படத்தில் நான் கதையின் நாயகியாக சாவித்ரி வேடத்தில் நடித்ததால் அதிகப்படியான கால்சீட் தேவைப்பட்டபோது, எனக்காக அந்த படக்குழுவினர் நிறையவே விட்டுக்கொடுத்தார்கள்.
விஜய்யின் சர்கார் படத்தில் நடிக்க ஏற்கனவே கால்சீட் கொடுத்திருந்தும் மகாநதியை நான் முடித்து விட்டு வரும் வரை எனக்காக காத்திருந்தார்கள். அந்த படத்தை முடித்த பிறகுதான் விஜய் படத்தில் நடித்தேன். அதேப்போல் விக்ரம், விஷால் படங்களிலும் அடுத்தடுத்து கால்சீட் கொடுத்து நடித்தேன்.