'பேமிலி ஸ்டார்' படத்திற்கு 'குஷி' வரவேற்பை நம்பும் விஜய் தேவரகொண்டா | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' குழுவினரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | ஆண்ட்ரியா படத்தை திரையிட கோர்ட் தடை | ஏழு தமிழ்ப் படங்களை பின்னுக்குத் தள்ளிய 'காட்சில்லா x காங்' | நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீர் மரணம் | இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! |
'குற்றம்-23' படத்தை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள ஒரு படத்தை இயக்குநர் அறிவழகன் இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இந்த படத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்றும் தகவலும் வெளியாகியிருந்தது.
இந்த தகவல் வெளியாகி பல மாதங்கள் ஓடிவிட்டன. அறிவழகன் இயக்கும் புதிய படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. அதேநேரம் படம் குறித்து மீடியாக்களிடம் எதையும் சொல்ல வேண்டாம் என்று அவரை நயன்தாரா கேட்டுக்கொண்டார் என்றும் சொல்லப்பட்டது.
இதற்கிடையில் அறிவழகன் படத்தை பெண்டிங் வைத்துவிட்டு அடுத்தடுத்து வேறுபல படங்களில் நடிக்க ஆரம்பித்தார் நயன்தாரா. அதற்கான காரணம் என்ன என்று குழப்பமாக இருந்தது.
இந்நிலையில், அறிவழகன் படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டார், அந்தப் படத்திலிருந்து நயன்தாரா விலகி விட்டார் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த படத்திலிருந்து நயன்தாரா விலகியதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் இல்லை.
ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு மேலாக காத்திருக்க வைத்துவிட்டு தற்போது தன் படத்தில் நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா ஏன் சொன்னார் என்பது புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் அறிவழகன்.